சென்னை | 359 கிராம் நகை, விலையுயர்ந்த 10 செல்போனுடன் ஊழியர் மாயம்
சென்னை அசோக்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் அகமது(19). இவரது தந்தை சாகுல் அமீது. இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பழைய தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார்.

சென்னை: சென்னை அசோக்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் அகமது(19). இவரது தந்தை சாகுல் அமீது. இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பழைய தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லமுனா மரைக்காயர்(28) என்பவர் சிறு வயதிலிருந்தே சாகுல் அமீதுவிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு நின்ற லமுனா மரைக்காயர், மீண்டும் சாகுல் அமீதுவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாகுல் அமீது, 359 கிராம் நகைகள் மற்றும் 10 ஐபோன்களை லமுனா மரைக்காயரிடம் கொடுத்து பர்மா பஜாரில் உள்ள கடையில் கொடுத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
What's Your Reaction?






